Thursday, November 28, 2013

விஜயதாரணி மற்றும் ஜெயலலிதாவை நேரலை நிகழ்ச்சியில் கொச்சை வார்த்தைகளால் திட்டிய தமிழ் உணர்வாளர் - வீடியோ

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சத்யம் தொலைகாட்சியில் நடந்த ஒரு விவாத மேடையில் காங்கிரஸ் எம்.எல்.எ. விஜயதாரணி மற்றும்  அதிமுக கட்சியினர் கலந்துகொண்டனர் , நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பில் இருந்த போது தமிழினம் மீது பற்று கொண்ட ஒருவர் போன் செய்து முதலைமச்சர் ஜெயலலிதா மற்றும் காங்கிரஸ் எம்எல்எ விஜயதரணியை  சகட்டு மேனிக்கு கொச்சை வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த விஜயதாரணி சத்தியம் டிவி மீது நேரலை ஒளிபரப்பில் சீரிப்பய்ந்துள்ளார். மேலும் இது குறித்து அந்த மர்ம வாலிபர் மீது சென்னை வேப்பேரியிலுள்ள கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர்களும் வெறுமனே அதனை கேட்டு கொண்டு இருக்கமுடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர் பேசிய வார்த்தைகள் உங்களுக்காக கீழே காணொளியில்.

Wednesday, November 27, 2013

தமிழ்ப்பட சூட்டிங்கில் வந்த நிஜ முதலிரவுக்காட்சி!

பிரபல இயக்குனர் இயக்கும் ரணகளமான படத்தில் பிரபல புதுமை நடிகர் நடிக்கிறார், கதாநாயகியாக இரண்டெழுத்து நடிகையும் நடிக்கிறார். எந்த படவாய்ப்புமே இல்லாமல் இருந்த நடிகைக்கு அந்த நடிகர் இந்த படத்தில் ஜான்ஸ் கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் இருவரும் நெருக்கமான, அன்பான கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். கதையில் இருவருக்கும் முதலிரவு அடிக்கடி தடைபடுகிறது இதனால் ஒரு கட்டத்தில் பொங்கி எழும் நடிகர் சடங்கு, சம்பிரதாயங்களை மூட்டை கட்டிவிட்டு மனைவியை அல்லேக்க தூக்கி கொண்டு போய் முதலிரவு நடத்துகிறார்.
இந்த காட்சி தத்ரூபமாக எடுப்பதற்காக தமிழில் ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளார் இயக்குனர். நிஜமாக இருவரையும் தாம்பத்திய உறவில் ஈடுபடவிட்டு அந்த காட்சியை படம் பிடித்துள்ளார். அந்த புதுமையான நடிகர் அடிக்கடி உச்சநிலையை அடைந்ததால் காட்சியை எடுப்பதற்கு 5 மணி நேரங்கள் ஆனதாம். இதன் பின் அந்த நடிகையும் நடிகரும் ஒன்றாகவே படபிடிப்பிற்க்கு வருகிறார்களாம். போகும் போதும் ஒன்றாகவே ஒரே காரில் செல்கின்றனராம்.
இந்த காட்சியை எடிட் செய்ததில் படத்திற்கு சென்சர் சர்டிபிகேட் கிடைக்குமா? கிடைக்காத! என படக்குழு கவலை அடைந்துள்ளதாம். அந்த அளவிற்கு கவர்ச்சியாக வந்துள்ளதாம் முதலிரவு காட்சி.

பலர் முன்னிலையில் பெண்கள் மேல் ஏறிநின்று அடித்து உதைக்கும் போலிச்சாமியார்

போலிச்சாமியார் ஒருவன் பேயை போக்குகிறேன், உடலில் உள்ள நோயை போக்குகிறேன் என தன்னை பார்க்க வரும் பெண்களின் கழுத்தில் ஏறி மிதித்து கொடுமை படுத்தியுள்ளான். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சாகும் நிலையில் கிடக்கும் அப்பெண்களை கண்டுகொள்ளாமல், அனைத்து மக்களும் உட்கார்ந்து கைதட்டி இந்த கொடூர செயலை வேடிக்கை பார்ப்பதுதான்.
வடமாநிலத்தில் மக்கள் இன்னும்  மூடநம்பிக்கையில் அதிகமாக மூழ்கியுள்ளனர். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ச்சியடைந்தும், நாட்டில் உள்ள மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். இவர்களை போன்ற மூட நம்பிக்கை கொண்ட மக்களால் தான் இன்னும் போலிச்சாமியார்கள் தைரியமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போலிச்சாமியார்களை எப்பொழுது அழிக்கப்போகின்றது அரசு.
இதய பலவீனமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்.

Tuesday, November 26, 2013

பிரகாஷ் ராஜ்ஜின் மறுபுறம் அதிர்ச்சியில் திரைஉலகம்!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான பிரகாஷ் ராஜ் மலையாள திரைப்பட உரிமையை வாங்கியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் தனது டூயட் மூவிஸ் மூலமாக ரசிகர்களுக்கு சிறந்த திரைப்படங்களை தந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இவர் சமீபத்தில் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலையாளத்தில் வெற்றி பெற்ற சால்ட் அண்ட் பெப்பர்(Salt and Papper) திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.

இதற்கு முன்பு பிரகாஷ் ராஜ், தெலுங்கில் வெற்றி பெற்ற ஹேப்பி டேஸ்(Happy Days) திரைப்படத்தை தமிழில் இனிது இனிது திரைப்படமாக எடுத்துள்ளார். தமிழில் பரவலாக பேசப்பட்ட அபியும் நானும் திரைப்படத்தை கன்னடத்தில் இயக்கியுள்ளார்.

தற்பொழுது தமிழில் பிரகாஷ் ராஜ் இயக்கிய டோனி என்ற திரைப்படம் அடுத்த வருடம் 2012 ம் ஆண்டு திரையிடப்படவுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரகாஷ் ராஜ் நடிக்க யோசித்து வருகிறார் என்று கொலிவுட் தகவல் தெரிவிக்கின்றன

Monday, November 25, 2013

Man Drinks milk from teen Girl Breast


ரஜினி அனுமதியுடன் சூர்யா நடிக்கும் பாட்ஷா 2

சூர்யா நடிப்பில் லிங்குசாமி தயாரித்து இயக்கும் படத்தின் கதை பாட்ஷா டைப் கதை போன்றது என தற்போது படக்குழுவினர் தகவல்களை கசியவிட்டுள்ளனர்.
இந்த படத்திற்கு பாட்ஷா 2 என்று சப் டைட்டில் வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.பாட்ஷா படம் போலவே கதையின் ஒருபகுதி மும்பையிலும், மற்றொரு பகுதி சென்னையில் நடைபெறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வெவ்வேறு கேரக்டர்களில் சூர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவு செய்வது சந்தோஷ் சிவன். மேலும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், மற்றும் ராஜ்பால் யாதவ் ஆகியோரும் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசைக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
இந்த படத்திற்கு பாட்ஷா 2 டைட்டில் வைக்க ரஜினியிடமும், சத்யா மூவீஸிடமும் பேசி அனுமதி வாங்கிவிட்டார் லிங்குசாமி. ஆனாலும் அதை சப்டைட்டிலாகத்தான் உபயோகிக்க முடிவு செய்துள்ளார். தமிழின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று ரஜினியின் பாட்ஷா. அந்த படத்தை போல சூர்யாவுக்கு இது கைகொடுக்குமா?

முதலமைச்சரின் காரின் மீது, மற்றொரு கார் மிக வேகமாக மோதி தாக்கியதால் பரபரப்பு! - பிந்திய செய்தி






முதல்வர், வைபவம் ஒன்றிற்கு சென்று இரவு 10 மணியளவில் வீடு திரும்பும்போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 


அந்த சமயத்தில் கடற்கரை வீதி வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸ் வாகனத்துடன் மோதியது. பின்னர் முதல்வரின் வாகனத்துடன் அசுர வேத்தில் மோதியுள்ளது.  இதனால் அப்பிதேசத்தில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.


 இத்தாக்குதல் சம்பவத்தில் முதல்வருக்கு பாதுகாப்பிற்கு வந்த பொலிசார் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தில் முதலமைச்சர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.


இந்த விபத்து குறித்து தகவலறிந்த  பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அருணாசலம் தெருவில் வசித்து வந்த முபாரக்அலி என்பவர் தான், போதையில் காரை ஓட்டி வந்து பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் கார் மீது மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பர்மா பஜாரில் சொந்தமாக செல்போன் கடை வைத்துள்ளார்.


இதைத் தொடர்ந்து போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முபாரக் அலியை கைது செய்தனர்.





கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான்.
புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும்.
ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர&pide;க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.


தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

Sunday, November 24, 2013

நாகரீக பொண்டாட்டி.













நாகரீகம் என
நாங்கள் - உங்கள்
உடையை விட 
உடலைத்தான் 
அதிகம் பார்த்திருக்கிறோம்.

நாகரீகம் என
நாடகம் போடுகிறீர்கள்.
உங்கள்
கணவன் மட்டும்
முக்காட்டோடே
முகம் காட்ட முடியாமல் 
மூலையில் இருக்கிறான்
தெரியுமா உங்களுக்கு?

"உன்
பொண்டாட்டியில் 
குறைவாய் இருக்கும் 
ஆடையை விட
தெளிவாய் தெரியும் 
உடல் 
எடுப்பாய் இருக்கிறது!!"
என்கிறார்கள்
வீதியில் நிற்பவர்கள். 

Thanks : அமல்ராஜ்

காதலரின் பெற்றோரை சந்திக்க போறீங்களா அப்ப முதல்ல இத படிங்க

ஒருவரை முதலில் சந்திக்கும் போது என்ன வகையான தோற்றத்தை ஏற்படுத்துகிறோமோ, அதுதான் அவரை மீண்டும் சந்திக்கும் போதும் நிலைத்து நிற்கும் என்று சொன்னால் அதில் உண்மை பொதிந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.

 இப்படியிருக்கும் போது, எந்தவொரு பெண்ணும், தன்னுடைய காதலனின் பெற்றோர்களை முதன்முதலில் சந்திக்கும் போது பதட்டமடைவதையும் தவிர்க்க முடியாது. 'அவர்கள் என்னை விரும்புவார்களா? எனக்கு அவர்களை பிடிக்குமா?' என்பது போன்ற எண்ணங்கள் அப்பொழுது அவர்களை அலைக்கழிப்பதையும் தவிர்த்திட முடியாது.

உங்களுடைய காதலரின் பெற்றோர்களை நீங்கள் முதன் முதலில் சந்திக்கும் அதில் தவறுகள் நடக்காத வண்ணம் நீங்கள் சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீறி தவறுகள் நடந்தால், எதிர்காலத்திலும் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்சோஃபாவில் சாய்ந்து படுத்துக் கொண்டு அவர்களை முதல் முறை சந்திக்கும் போது என்ன நடக்கும் அல்லது அவர்களை எப்படி கவரலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள் - இதற்கு காரணம் இது பற்றி சில மோசமான கதைகளை கேட்டிருப்பது தான். எல்லா சந்திப்புகளுமே மோசமாக முடிவடைவதில்லை.

எனினும், காதலரின் பெற்றோர்களை சந்திப்பதற்கு சற்றே முன்னேற்பாடுகளுடன் தயாராவது சிறந்த வழியாகும். நேர்மறை அணுகுமுறையும், திறந்த மனதுடன் இருப்பதும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும். அவர்களிடம் நன்மதிப்பை பெறுவதில் உறுதியாக இருக்கவும். காதலரின் பெற்றோர்களைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் உங்களைத் தூங்கவும் விடாது. எனினும், இந்த கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும் நேரத்தில் காதலரின் பெற்றோர்களை சந்திக்க தயாராகி விட்டு, நிம்மதியாக உங்களால் தூங்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

 1. முன்யோசனை தேவை

காதலரின் பெற்றோர்களை பார்க்க முடிவெடுக்கும் முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து, திட்டமிடவும். நீங்களிருவருமே இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை மிகவும் உணர்ந்தவர்களாகவும், ஒரே எண்ணத்துடன் உழைக்கவும் வேண்டும். உங்கள் இருவருக்கும் இடையிலான உறவு எவ்வளவு தீவிரமானது மற்றும் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை இதில் உறுதிப்படுத்தவும். மேலும், காதலரின் பெற்றோர்களை சந்திக்க நீங்களும் சிறப்பாக திட்டமிட வேண்டும்.

2. சற்றே ஆராய்ச்சி செய்யவும்

இந்த விஷயம் பற்றி சற்றே ஆராய்ச்சி செய்வது நல்ல பலனைத் தரும்! எனினும், இந்த ஆராய்ச்சிக்காக உங்கள் காதலரை சிறிதளவு தொந்தரவு செய்ய வேண்டியிருக்கும். அவருடைய பெற்றோர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், முடிந்த வரையிலும் அவர்களைப் பற்றியும், அவர்களிடையேயான திருமண பந்தம் பற்றியும் கூட அறிந்து கொள்வது நலம். அவர்களுடைய இயல்பை புரிந்து கொள்ளவும், விருப்பு-வெறுப்புகளை அறிந்திடவும் முயற்சி செய்யவும். உறவு தொடர்பான இந்த அறிவுரைகள் உங்களுக்கு அவர்களை கவர மிகவும் உதவிகரமாக இருக்கும். காதலரின் பெற்றோர்களை சந்திப்பதில் சிறிதளவு முயற்சியும், வலியும் இருக்கும். சுகமாக அனுபவியுங்கள் - காதலுக்காக!

3. பரிசுகளில் வெளிப்படுத்தலாம்

இது உங்கள் காதலரின் பெற்றோருடனான முதல் சந்திப்பு! இதனை தனித்துவமானதாக மாற்ற, சில பரிசுகள் தேவை. உங்களுடைய வருங்கால மாமியாருக்காக ஒரு பூங்கொத்தை வாங்கலாம். பூக்கள் ஏற்படுத்தும் மந்திர விளைவுகள் அலாதியானவை. மிகவும் விலை உயர்ந்த பரிசுகளை வாங்க வேண்டாம். ஏனெனில் அவை நீங்கள் செலவாளி அல்லது அவர்களுடைய கவனத்தை ஈர்க்க முயலுகிறீர்கள் என்ற தோற்றத்தை அவை உருவாக்கிவிடும். உறவுக்கான இந்த அறிவுரை அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவையாகும்.

4. உடைகள்

'ஆள் பாதி ஆடை பாதி' - நீங்கள் அணியும் ஆடை உங்களைப் பற்றி தெளிவாக சொல்லிவிடும். உங்களுடைய ஆடை அவர்களிடம் மிகச்சரியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஜீன்ஸ் மற்றும் அரைகுறை உடைகளுக்குப் பதிலாக, பாரம்பரியமான உடைகளை அணிந்து சொல்வது நல்லது. காதலரின் பெற்றோர்களைப் சந்திக்க செல்வது சற்றே செலவை வரவழைக்கும் விஷயம் தான், ஆனால் அந்த செலவை நல்ல உடைகளை வாங்க பயன்படுத்துங்கள்.

5. வார்த்தைகளில் கவனம்

காதலரின் பெற்றோர்களை சந்திக்க செல்பவர்களுக்கான உறவு அறிவுரைகளில் ஒன்று - வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள் என்பது தான். உரையாடும் போது சிற்சில தவறான வார்த்தைகள் வருவதையும் கூட தவிர்ப்பது நலம். ஆர்வமில்லாத தலைப்புகளில் பேச வேண்டாம், அவர்களுக்கு எந்த தலைப்பு பிடிக்குமோ அதனைப் பேசலாம் - அளவாக. மதம் மற்றும் அரசியல் போன்ற தலைப்புகளை தவிர்ப்பது நல்லது. உரையாடுவதில் நீங்கள் கில்லாடி என்றால், இந்த முதல் சந்திப்பு என்றென்றும் நினைவில் நிற்கும் சந்திப்பாக அனைவருக்கும் அமையும்.

6. நடத்தை

'நடத்தையே மனிதனை உருவாக்குகிறது' - இந்த பழமொழியை காதலரின் பெற்றோர்களை சந்திக்க செல்லும் போது நினைவில் கொள்வது நல்லது. சிறிய விஷயம் கூட பெரிய அளவிலான மாற்றங்களை நிகழ்த்தி விடும் - தன்மையுடன் நன்றி சொல்வது, பணிவாக வேண்டிக் கொள்வது (ப்ளீஸ்) போன்றவை உறவை அடுத்த படிக்கு கொண்டு செல்ல உதவும்.

7. வாழ்த்துக்களை அடுக்குங்கள்

வாழ்த்துக்களுக்கு மயங்காதவர்கள் யாருமில்லை, உங்கள் காதலரின் பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. எனவே, அவர்களிடமோ, அவர்கள் வீட்டிலோ எந்தவொரு நல்ல விஷயத்தைக் கண்டாலும் புகழத் தொடங்குங்கள்.

இது போன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதால் காதலரின் பெற்றோர்களுடனான முதல் சந்திப்பு இனிமையான நினைவுகளைத் தரும். முயற்சி செய்யுங்கள், இதயங்களை வெல்லுங்கள்!!

பிள்ளையாருக்கு லீவு விட்டிருக்கு!


- சிறுகதை -

ஜேசுநாதர், பிள்ளையார், புத்தர், அல்லாஹ் இலங்கையை அர்ச்சித்த கடவுள்கள். இவர்களிடத்தில் வெட்டுக்குத்து வந்ததாகவோ, ஏரியா பிரச்சனை நடந்ததாகவோ, கதிரை கலவரம் மூண்டதாகவோ நான் அறிந்திருக்கவில்லை. எவரும் சொல்லித்தரவும் இல்லை. அவர்கள் நால்வருக்குள்ளும் நல்லதொரு அண்டர் ஸ்டாண்டிங் இருப்பதாகவே எனக்குத்தெரியும். தாங்கள் நால்வரும் ஒருவரே எனக்கூட தங்களின் சில பிரசங்கிகளால் அறிவிக்கப்பட்டதாகக்கூட எனக்கு யாரோ சொல்லிக்கொடுத்த ஞாபகம். இவர்கள் நல்ல நண்பர்கள். நல்ல சகோதரர்கள். தங்களுக்குள்ளே நல்லதொரு உறவை வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியும். ஆனாலும், இதை சொல்லும் பொழுது இவற்றை ஏற்றுக்கொள்வதாய் சுகுமார் சாடை காட்டாமல் எதிர் புறமாய் தலையை அசைத்துக் கொண்டது எனக்கு கோவத்தை உண்டுபண்ணியது. 

நன்றாக ஞாபகமிருக்கிறது அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. சூரியன் வெளியே வருவதற்குள் நான் விமான நிலையத்துள் சென்று சேர்ந்துவிட்டேன். காலை வருவதற்குள் லண்டனில் இருந்து என் நண்பன் சுகுமார் வந்திடவேண்டும். இதுவே எனக்கு சொல்லப்பட்ட திட்டம். ஒரு பக்கம் சிலர்  சிலரை கட்டிக்கொண்டு அழுவதையும், மறு புறம் சிலர் ஓடிச்சென்று கட்டியணைத்து சுகம் விசாரிப்பதையும் அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எனது கண்களில் திடிரென வந்து விழுந்தான் சுகுமார். "டேய் எப்பிடிடா இருக்கா??" என கேட்டவாறு கட்டியணைத்தவனை நானும் இறுக அணைத்து "நல்லா இருக்கேண்டா! எப்பிடி???" என்றேன். பதின்மூன்று வருடங்கள் ஸ்கைப்பிலும், முகப்புத்தகத்திலும் மட்டும் வந்தவன் இன்று நேரடியாக எனக்குமுன் நிற்கிறான். இருவரும் பேசியபடி வெளியே வந்து ஊர் நோக்கி புறப்பட்டோம்.

ஊரை சென்று அடைவதற்குள் சுகுமாரிடமிருந்து ஏகப்பட்ட விசாரணைகள், கேள்விகள். சில கேள்விகள் தவிர்த்து பலகேள்விகளுக்கு என்னிடம் விடையிருந்தது. அரசியல், தமிழ் தேசியம், போராட்டம் போன்றவையே அந்த சில. தனது வன்னியையும், வடக்கையும் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக இணையத்திலும், தொலைக்காட்சிகளிலும் மட்டும் பார்த்து கேட்டு வளர்ந்தவன் இல்லையா, அதுதான் நேரில் வந்ததும் ஏகப்பட்ட சந்தேகங்கள் அவனிடம். திரும்ப திரும்ப அவன் கேட்ட சில கேள்விகளால் கோவம் அடைந்த என்னை சரி செய்து சாரி கேட்டு இறுதியாக ஒரேயொரு வில்லங்கமான கேள்வி மட்டும் கேட்டு முடித்தான். வரப்போகும் மாகாணசபை தேர்கள் தொடர்பாக நீ என்ன நினைக்கிறாய் என்கின்ற கேள்வி அது.  அதற்கு ஒரு வாசல் மூடினால் இன்னொரு வாசல் கட்டாயம் திறப்பான் கடவுள் என்றேன். அவ்வளவுதான். புரிந்துகொண்டானோ இல்லையோ ஓகே என தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.

அவன் ஊர் போய் சேர்ந்தோம். அவனிற்கோ ஏகப்பட்ட சந்தோசம். என்ன மச்சான் நம்ம ஊரு இவ்வளவு மாறிப்போச்சு என வியக்கும் போதெல்லாம் ஊர் மட்டுமில்ல மச்சி நம்ம சனமும்தான் என பதில்சொல்லி அவன் புருவங்களை உயரப்பண்ணுவேன். A9 ஐ பார்த்து எவ்வளவு அழகா செய்திருக்கிறாங்க என்றபோது 'ரோட்டுக்களை மட்டும்' என சொல்லி தலை குனிந்தேன். இருந்தாலும் இங்க வந்ததும் அந்த  பழைய ஞாபகங்கள் எல்லாம் வருதுடா எனச் சொன்னபோது மட்டும் 'உஷ்' எனச்சொல்லி அவன் வாயை மூடினேன். 

ஒருவாறு ஊரை அடைந்தபோது மணி இரவுச்சாப்பாட்டிற்கு சரியாய் இருந்தது. அவன் விருப்பப்படியே சிவப்பு அரிசிச் சோறும்,  இரணை மடு குள விரால் மீன் குழம்பும், முருங்கைக்காய் பிரட்டலும் பரிமாறப்பட்டது. வயிற்றையும் மனதையும் நிரப்பிய அந்த சாப்பாட்டோடு படுக்கைக்கு போனோம். எனக்கோ தூக்கம் கண்களை பிய்த்துக்கொண்டு வந்து இமைகளில் தொங்கிக்கொண்டிருந்தது. 'நான் எவ்வளவு காலத்திற்கு பிறகு நம்ம தேசத்திற்கு வந்திருக்கேன்... ஒனக்கு தூக்கம் கேட்குதா..?' என என்னை திட்டினான் சுகுமார். 'ஆமா, நாங்க முழிச்சிருக்க வேண்டிய நேரத்திலெல்லாம் முளிச்சிருந்ததால்தான் இப்பெல்லாம் எங்களுக்கு இப்படி நித்திரை வருது.. நீங்க அப்ப  நல்லா  தூங்கிநீங்கதானே.. இப்பவாவது கொஞ்சம் முளிச்சிருங்க..!' எனச்சொல்லி மறுபக்கம் புரண்டு படுத்தேன். இருந்தும் அவன்தான் வென்றான். 'சரி சொல்லித்தொலை' என சிணுங்கிய கோவத்தோடு அவன் பக்கம் மீண்டும் புரண்டேன்.

விடிய விடிய பேசிக்கொண்டிருந்தோம். திரும்பவும் பாடசாலைக்காலம், பருவகாதல், எழுட்சிப்போராட்டம், இடப்பெயர்வுகள், காட்டிக்கொடுப்புக்கள், துரோகங்கள், தொலைவுகள், இரத்த சிந்தல்கள், மர்மங்கள், அரசியல், ஆதிக்கம், ஆக்கிரமிப்பு என அன்று இரவு பூராவும் நாங்கள் பேசியவையின் பட்டியல் நீண்டுகொண்டு போனது. இறுதியாக 'சுமதி எங்க மச்சான்?' என்ற கேள்வி எதிர்பாராமல் அவன் வாயில் நழுவி நிலத்தில் வந்துவிழுந்தது. அவள் நன்றாக இருக்கிறாள் என சொல்லி பேச்சை முடித்துவிடலாம் என எண்ணியபோது 'அவ உசுரோட இருக்காவா?' என இரண்டாம் கேள்வியால் என்னைச் சுட்டான் சுகுமார். 'ஆமாட, உசுர் மட்டும் இருக்கு.. தெல்லிப்பளை ஆஸ்பத்திரியில் இருக்காடா.. கடைசி நேரத்தில அப்பிடி ஆகிடிரிச்சி..' என சொல்லிமுடிக்கையில் அவன் எழுந்திருந்து படுத்திருந்த பாயின் நுனிகளை நீண்டிருந்த அவன் நிகங்களினால்பிய்த்துக்கொண்டிருந்தான் சுகுமார். சுமதி இவன் பள்ளிக்காதலி. அந்த நாட்களில் பாடசாலை பங்கரினுள்தான் இந்த காதல் முதல் முதல் செட் ஆகியது. பின்னர் நடந்தவை பற்றி நானோ சுகுமாரோ இவ்விடத்தில் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் தமிழன் என்றால் அது புரியும்!

நீண்ட நாட்களின் பின்னர் காலையில் சுகுமார் சூரியனை தாயகத்தில் தரிசிக்கிறான். 'ஒரே சூரியன் எண்டாலும் அத வன்னில இருந்து பார்த்தா அதுக்கு ஒரு கம்பீரம் தெரியுது மச்சான்..' என சொல்லிக்கொண்டு வானத்தை அண்ணாந்துபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான் அவன். நானோ பழகிப்போன சூரியனோடு எதற்கு பேச்சு என தூக்கத்தில் குறியாய் இருந்தேன். நேரம் கொஞ்சம் கழிந்ததும், வெளியே போகலாம் என முடிவெடுத்து வீட்டின் பின் புறத்தில் சாத்தியிருந்த துவிச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்தோம். இரயில் வந்தாலும் வன்னியில் உலாவ சைக்கிளை விடவும் ஒரு இனிமையான வாகனத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. அங்கு போக வேண்டும், இங்கு போக வேண்டும், அதை பார்க்க வேண்டும், இதை பார்க்க வேண்டும் என அவன் அளப்பரைகளில் சைக்கிள் மிதிக்கவே வேண்டாம் என ஆகியது எனக்கு. 

சுகுமார் கேட்டது போலவே அங்கும் இங்கும் என அவன் பார்க்க, போக வேண்டி ஆசைப்பட்ட சகல இடங்களையும் கூட்டிச்சென்று காட்டி ஆகிவிட்டது. நேரம் நண் பகல் கடந்து மாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. எனக்கோ சைக்கிள் மிதித்து கால்களில் தலைகாட்டிய வலி ஒருபுறம், வயிற்றை அடிக்கடி நக்கிப்போகும் பசி மறு புறம். வீட்டிற்கு கிளம்பலாம் என நினைத்து சைக்கிளை திருப்புகையில் 'மச்சான்  முக்கியமான இடம் ஒண்டை விட்டுட்டோமே.. நம்ம ஆலமரத்து பிள்ளையாரடி..' என சத்தமிட்டான் சுகுமார். 'ஆமால்ல...' என மறுபடியும் சைக்கிளை திருப்பி நாங்கள் அன்றெல்லாம் மாலை வேளையில் அடிக்கடி கூடும் அந்த ஆல மரத்தடி பிள்ளையாரை நோக்கி மிதிக்க ஆரம்பித்தேன். போகையில் அவனிற்கு என்ன ஞாபகம் வந்ததோ தெரியவில்லை எனக்கோ அந்த நாட்களில் அந்த பிள்ளையார் கோவிலிற்கு தாவணி கட்டிவரும் அழகிய பெண்களை பார்த்து ஜொள்ளு விட்ட காலங்கள் தான் மனதில் வந்து வந்து மறைந்து கொண்டிருந்தது.

ஒருவாறு அங்கு வந்து சேர்ந்தோம். அங்கு சைக்கிளை ஓரமாய் நிறுத்தியதுதான் தாமதம். 'டேய், என்ன மச்சான், இங்க இருந்த நம்ம பிள்ளையார காணோம்!! அவர் இருந்த இடத்தில புத்தர் இருக்கார்?? என்னடா ஆச்சு..?? தடபடவென ஆர்ப்பரித்தான் சுகுமார். 'சொல்லுடா... என்ன ஆச்சு..?' திரும்ப திரும்ப அதே கேள்வி.என்னிடம் பதில் இருக்கா என்ன? ஏதோ பிள்ளையாரை நானே கடத்திக்கொண்டுபோய் கொலை செய்த மாதிரி... இவன் பேச்சு.. கொஞ்சமேனும் ஆச்சரியம் இல்லாமல், கொஞ்சம் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி அவன் முகத்தை திருப்பி அவனிடம் சொன்னேன்..

"என்ன மச்சான் செய்யிறது.. கூல் டவுன்... இங்க இருந்த நம்ம பிள்ளையார் லீவில போயிருக்கார்.. அதான் அவருக்கு பதிலா இப்ப இவர் வந்திருக்கார்... பட் மீண்டும் நம்ம பிள்ளையார்  நிற்சயம் வருவார்!!... டோன்ட் வொறி கண்ணா.. இப்ப நீ வா நாம வீட்டுக்கு போவம்!!"

நன்றி : http://rajamal.blogspot.com

இலவசமாக திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட புதிய சமூக இணையதளம்..!

18000 க்கும் மேற்பட்ட ஆங்கிலப்படங்கள், 7000த்திற்கும் மேற்பட்ட இந்தியப்படங்கள் என வேர்ல்டுப்ளோட் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

உலகளவில் மற்ற தேசிய மொழிகளிலும், குறிப்பாக எதிர்வரும் காலங்களில் பிரஞ்சு, இத்தாலி போன்ற வெளிநாட்டு  மொழிகளில் அமைந்த படங்களையும், இந்தியர்களுக்கான மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களை இலவசமாக காண முடியும் என்றும் அந்நிறுவனத் தலைவர் கூறியுள்ளார். 

அக்காலப் படங்கள் முதல், இக்காலத்தில் சமீபத்தில் வெளியிட்ட திரைப்படங்கள் வரை இந்த தளத்தில் காண முடியும் என்பது சிறப்பு. 

அதைப்பற்றி அந்நிறுவனத்தலைவர் கூறும்பொழுது, 1890 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் படங்கள் முதல், 2013 தற்காலத்தில் உருவாக்கப்பட்ட வண்ணத் திரைப்படங்கள் வரை அனைத்து திரைப்படங்களையும் வேர்ல்ட் ப்ளோட் தளத்தின் மூலம் இலவசமாக அனைவருமே பார்க்க முடியும் என்றார். 

இந்த இலவசமாக சேவையை லேப்டாப், ஐபேட், ஆண்ட்ராய்ட் போன்கள், டேப்ளட் போன்றவைகளிலும் கண்டுகளிக்கும் வகையில் தளத்தின் இன்டர்பேஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாமர மக்களும் பார்க்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் வண்ணத் தொலைக்காட்சிகளிலும் இத்தளத்தின் படங்களை பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். 

இத்தளத்தில் இணைந்து, இதில் உள்ள பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தலாம். 

தளத்திற்கான முகவரி:http://worldfloat.com/

மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்

கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவைக் காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டேக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிடப்பட்டது. எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 முழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)


இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.

கம்ப்யூட்டரே பாடல் எழுதித்தரும் மென்பொருளை உருவாக்கி கவிஞர் வைரமுத்துவின் மகன் சாதனை! இனி வைரமுத்துவிற்கு வேலையில்லையாம்!

 



வைரமுத்து மகன் மதன் கார்க்கி இப்போது சினிமாவில் மிக பிரலமான பாடலாசிரியர்.

சிறிய படம் பெரிய படம் எதுவாக இருந்தாலும் பாடல் எழுதக்கூடியவர்.

இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்காமல் கொடுப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு பாடல் எழுதுவார்.

அடிப்படையில் மதன் கார்க்கி ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர் (Computer Engineer). அண்ணா பல்கலை கழகத்தில் (Anna University) உதவி பேராசிரியராக பணியாற்றிவர். தற்போது வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுநேர பாடலாசிரியராகி விட்டார்.

Poet-Madhan-Karky-invented-new-software-to-write-a-Song


மதன் கார்க்கி ஏற்கெனவே தனது கார்க்கி ரிசர்ச் செண்டர் (Research) மூலம் தமிழ் அகராதி (Tamil Dictionary) , ஒலிங்கோ என்னும் டிரான்ஸ்லேட்டர் (Olingo Translator)), சர்ச் பிலிம் சாங் (Search film song) போன்ற மென்பொருளை உருவாக்கி அதை பயன்பாட்டுக்கு விட்டுள்ளார்.

இப்போது ஒரு திரைப்படத்தில் பாடல் வரும் சூழ்நிலையை பதிவேற்றம் செய்தால் கம்ப்யூட்டரே பாடல் எழுதித்தரும் மென்பொருளை (Song making software) உருவாக்கி இருக்கிறார்.

இதுகுறித்து மதன் கார்க்கி கூறியிருப்பதாவது: சினிமா பாட்டு கவிஞனின் ஆன்மாவிலிருந்து எழுதப்படுவதல்ல. கதை, காட்சி, மெட்டுக்கு (
Story, Seen, Music) ஏற்ற மாதிரி எழுதப்படுவது.

இதற்கு கவிஞனின் உணர்வு முக்கியமில்லை. அதற்கேற்ற வார்த்தையை தேடிக் கண்டுபிடிப்பதே முக்கியம்.

அதனை கம்ப்யூட்டர் செய்து விடும். காதல், தீ, பூ, உலகம், காற்று (Fire, Love, Flower, World) இந்த வார்த்தைகள்தான் பாடலில் அதிகம் பயன்படுத்தப்படும்.

எந்ததெந்த சூழ்நிலைக்கு எந்த வார்த்தைகள் தேவைப்படும் என்பதை முடிவு செய்து இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலையை (Situation) பொருத்தினால் அது தொடர்புடைய வார்த்தைகளை இணைத்து பாடலாக தந்துவிடும். சின்ன திருத்தங்களை செய்தால் போதும்.

"காதல் சூழ்நிலையை என் மென்பொருளுக்கு கொடுத்தபோது அது உருவாக்கி தந்த முதல் வாக்கியம் "திருவிழாவைப்போன்ற சந்தோஷம் தரும் உறவு" என்ற வாக்கியத்தை தந்தது.

இதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டபோது இது என் தந்தை அல்லது வாலி எழுதிய வார்த்தை போன்று இருப்பதாகச் சொன்னார்கள். "

இந்த முயற்சி பாடலாசிரியர்களின் திறமையை குறைக்க அல்ல. தொழில்நுட்பத்தின் பலத்தை (Technology Support for Poets) அவர்களுக்கு வழங்குவதற்காக என்றார்.




உங்கள் அபிமான 'ஊதாகலரு ரிப்பன்' ஸ்ரீ திவ்யா பாடகியாகிறார்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல நடிச்சாலும் நடிச்சார், ஸ்ரீ திவ்யாவுக்கு வருத்தமே இல்ல பா. அடுத்தடுத்து ஏராளமான பட வாய்ப்புக்கள்! அதிலும், ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து நடிக்கும் “பென்சில்” படத்துக்கு அதிக எதிர்பார்ப்புக்கள். அதுபோக விரதீர சூரன், ஈட்டி போன்ற படங்களிலும் நடிக்கிறார் என்று சொல்லியிருந்தோம் அல்லவா? இப்போ லேட்டஸ் நியூஸ் என்னவென்றால், ஈட்டி படத்தில் பாடுகிறாராம் ஸ்ரீ திவ்யா.

இப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களாம். அதில் நான்குபாடலை கம்போஸ் செய்துவிட்டார்களாம். இரண்டு பாடல்கள் ஒலிப்பதிவும் செய்தாகிவிட்டதாம்! இது ஒரு ஆக்‌ஷன், த்ரில்லர் மூவி என்கிறார்கள். அத்தோடு இது ஒரு ஸ்போர்ட்ஸ் சப்ஜெக்ட் படமாம்!

ஆடுகளம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியளராக இருந்த ரவி அரசு இப்படத்தை இயக்குகிறார். நமக்கு அதெல்லாம் முக்கியம் இல்லப்பா! ஸ்ரீதிவ்யா பாட்டு எப்போ ரிலீஸ் ஆகும்? என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

பிறரின் முடிவுக்கு கட்டுப்படாதீர்கள்.....

நம் வாழ்வில் ஒரு சில நேரங்களில் பிறரின் அறிவுரைகளை நாட வேண்டி வரும். குறிப்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும், பணி சார்ந்த தீர்மானங்கள் எடுக்கும் போதும் மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால், ஒரு சிலர் நம்மை கட்டுக்குள் வைக்க தானாகவே அறிவுரைகளை வழங்குவார்கள்.


ஒரு சிலர் தன்னைச் சுற்றி இருப்பவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புவார்கள் அல்லது தான் நினைக்கும் வழியில் செல்வதற்கான எல்லாவற்றையும் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களை நம்ப வைப்பது மற்றும் அவரோடு சேர்ந்து இருப்பது சிறிது கடினம் தான்.

இவர்கள் யாருடைய அறிவுரைகளையும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை கட்டுபடுத்த திறமையான நடவடிக்கைகளும் எண்ணங்களும் கொண்ட சிலரால் மட்டுமே முடியும். அவர்களின் ஆணவத்தையும், தேவைகளையும் புரிந்து கொண்டு, அவர்களின் போக்கில் செல்வது தான் அவர்களை கட்டுப்படுத்தும் ஒரே வழி.

அதனால் இப்பொழுது இப்படிப்பட்டவர்களை சமாளிக்க சிறந்த வழிகள் சிலவற்றை பார்க்கலாம்.

• இப்படிப்பட்டவர்களோடு எப்பொழுதுமே வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்களால் தனது தோல்வியை சந்திக்க முடியாது. அதனால், உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள அவர்கள் சொல்வது சரி என்று கூறிவிட்டு உங்கள் தேவையை கேளுங்கள். இதனால் அவர்களுக்கு தன்னை முக்கியமாக கருதுவதற்கும் அவர்களின் வேலையை தானே செய்வதற்கும் வழிவகுக்கும்.

• இவர்கள் நம் வாழ்வில் நல்லதை செய்யாவிட்டாலும் தீர்வு எடுப்பதிலும் ஏற்பாடு செய்வதிலும் சிறந்தவர்கள். அதனால் அவர்களின் கெட்ட நடவடிக்கைகளை தவிர்த்து நல்லதையே எடுத்துக்கொள்ளுவோம்.

நரேந்திர மோடிக்கு திடீர் ஆதரவு கொடுக்கும் நமீதா, மல்லிகா ஷெராவத். காங்கிரஸ் அதிர்ச்சி

நரேந்திர மோடியும் நானும் ஒரே ஊரு…. குஜராத்! ஆனால் நான் எந்த கட்சியில் சேர்றதுன்னு குழப்பமா இருக்கு. பட், பி.ஜே.பி மேல எனக்கொரு கிரேஸ் இருக்கு. எங்க ஊரை மோடி எவ்வளவு சுத்தமாக வச்சுருக்கார் தெரியுமா என்றெல்லாம் அவ்வப்போது ஃபீல் ஆகும் நமீதா, வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வார் போல தெரிகிறது.

தென்னாட்டின் மல்லிகா ஷெராவத்தான நமீதாவின் ஆசை இப்படியிருக்க, வடநாட்டின் நமீதாவான மல்லிகா ஷெராவத்தின் ஆசை எப்படியிருக்கிறது? அவருக்கும் மோடியை பிரதமராக முன்னிருத்தும் பி.ஜே.பி யை ஆதரிக்க முடிவெடுத்திருக்கிறாராம். இதற்கிடையில் அவர் பேட்டியில் பகிரங்கமாக ராகுல் காந்தியையும், நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் மீது எனக்கு பெரிசா அபிப்ராயம் இல்ல. ஆனால் என் ஷோவுக்கு நரேந்திர மோடி வந்தால் அதுதான் என்னுடைய பெருமை என்று கூறியிருக்கிறார். ஆமாம்… இவர் என்ன ஷோ பண்ணப் போகிறாராம். சேனல் மூலம் தனக்கு மாப்பிள்ளை தேடப் போகிறாராம்.
நமீதா, மல்லிகா ஷெராவத் ஆகிய இரண்டு கவர்ச்சி நடிகைகளும் ஒரே நேரத்தில் நரேந்திரமோடிக்கு ஆதரவு கொடுத்துள்ளதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. கோலிவுட், பாலிவுட் என அனைத்திலும் நரேந்திரமோடிக்கும் ஆதரவு பெருகி வருவதால் காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கு ஆதரவு கொடுக்கும் கவர்ச்சி நடிகைகளை தேடி வருகின்றனர். முதல்கட்டமாக இதில் சிக்கியிருப்பவர் விஜயசாந்திதான்.


உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தவன் ஒரு தமிழன்

எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான். என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.


இத்தனைக்கும் செண்பகராமன் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்காய் போற்களமாடிய வீரர்கள் யார் என்று எமது தமிழ் சகோதரர்களிடம் ஒரு கேள்வி கேட்டால்; உடனே சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் என ஒரு பட்டியலை தருவார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன் தமிழர்கள் ஒருவரும் போராடவில்லையா? அல்லது அவர்களின் போராட்டத்தில் வீரியம் இல்லையா? எண்ணற்ற தமிழ் மறவர்கள் விடுதலைக்காக வீரகாவியமானார்கள். வெள்ளையனின் பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் முன்னால் வாளும் வேலும் கொண்டு போராடினால் சாவு நிச்சயம் என்று தெரிந்தும்; அடிமையாக வாழ்வதைவிட செத்துமடிவதே மேல் போராடிய வீரபாண்டிய கட்டப்பொம்மன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்ற எண்ணற்ற தமிழ் மறவர்களையெல்லாம் பார்க்க உங்களுக்கு வீரர்களாக தெரியவில்லையா? இப்படி தமிழர்கள் இருப்பதால் தான் தமிழினத்தின் வரலாறு மண்ணோடு மண்ணாகிப் போகிறது. தமிழர்களாகிய நாங்கள் கூட தமிழ் வீரர்களை நினைவுகூறாவிட்டால் வேறு எவன் நினைவுகூறுவான்? கேரளாவிலோ அல்லது ஆந்திராவிலோ போய் கேட்டுப்பாருங்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் யார் என்று? ஒரு பத்து போராவது சரியான பதில் தருவார்களா? இல்லை நண்பர்களே நாங்கள் தான் எங்கள் வரலாற்றை பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் காலம் எம் வரலாற்றை மறந்துவிடும். இன்னும் ஒரு ஆச்சரியத்தை உங்களுக்கு தருகிறேன்.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.
‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது.  அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி)  என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.
இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான் பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில் கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு. அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்த வேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்த செண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தை விட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

கூகிள் தேடலில் பயனுள்ள வசதிகள்

இணையம் என்பது மிகப் பெரிய பரந்து விரிந்த கடலைப் போன்றது. அதில் நீங்கள் பயணிக்க வேண்டுமானால், இணையத்திற்கு நீங்கள் பரிச்சயமாக வேண்டுமானால் நிச்சயம் சர்ச் என்ஜினை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

இணையத்தில் கிடைக்கும் சர்ச் என்ஜினில் முதன்மையானது கூகுள் சர்ச் என்ஜின். உலகத்தில் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் கூகிள் சர்ச் என்ஜினைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

useful-search-engine-features-in-google-giant
காரணம் கூகிளுக்கு நிகர் கூகிள். அது தரும் பல்வேறு வசதிகளுடன், உடனடித் தகவல்களைத் திரட்டித்தரும் வேகமும் அபரிதமானது. மேலும் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி கூகிள் எர்ச் என்ஜினை விரிவாக்கிக்கொண்டே உள்ளனர். அதில் உள்ள தொழில்நுட்பத்தைக் காலத்திற்கேற்றவாறு அப்டேட் செய்துகொண்டே உள்ளனர்.

அவ்வாறான கூகிள் சர்ச் என்ஜின் தளமானது நமக்கு கூடுதலான வசதிகளையும் தருகிறது. குறிப்பிட்ட துறைத் தொடர்பாக மட்டுமே தேடுவதற்கான தேடியந்திர வசதியையும் நமக்கு கொடுக்கிறது. அவ்வாறான வசதிகளுடன் கூடிய தளங்களையும் பார்ப்போம்.

நியூஸ் கூகிள் டாட் காம்.

உங்களுக்கு உடனடி  செய்திகள் வேண்டுமெனில், நீங்கள் இந்த தளத்தை நாடலாம். இதில் உலகத்தில் உள்ள பல்வேறு செய்திகளைத் தொகுத்துத் தரும் தளமாக உள்ளது.

இமேஜஸ் கூகிள் டாட் காம்.

உலகத்திலேயே மிகச் சிறந்த படங்களை தேடும் தேடிந்தியந்திர வசதி இது. உங்களுக்குத் தேவையான சரியான படங்களை தேடிப்பெற்றுக்கொள்ளும் வசதியை இது அளிக்கிறது.
கூகிள் டாட் காம் /ஷாப்பிங்.

இந்த தளத்தின் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். கூகிள் ஷாப்பிங் தளத்தின் மூலம் நீங்கள் வாங்க கூடிய பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு, வாங்கலாம்.

கூகிள் டாட் காம் /பைனான்ஸ்.

ஸ்டாக் மார்க்கெட் பற்றிய விரைவான கண்ணோட்டதை அறிய இத்தளம் உதவும்.

மேப்ஸ் கூகிள் டாட் காம்.

இதன் மூலம் சேட்டிலைட் போட்டோ, உங்களுக்குத் தேவையான வரைபடங்களை காண முடியும்.

வீடியோ கூகிள் டாட் காம்.

இத்தளத்தின் மூலம் உங்களுக்குத் தேவையான கல்வி வீடியோக்களை தேடிப் பெற்றுக்கொள்ள முடியும்.

யூடியூப் டாட் காம்.

சில வருடங்களுக்கும் முன்பு கூகிள் இத்தளத்தை வாங்கிக்கொண்டது. மில்லியன் கணக்கான வீடியோக்களைப் பெற்றுள்ளது. தற்பொழுது வீடியோவின் மூலம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளையும் பயனர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஸ்காலர் கூகிள் டாட் காம்.

கல்வியியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய இத்தளம் பயன்படுகிறது கல்வியியலுக்குத் தேவையான  ஆவணங்களை இத்தளத்தின் மூலம் தேடிப் பெற்றுக்கொள்ள முடியும்.

புக்ஸ் கூகிள் டாட் காம்.

இலக்கிய புத்தகங்களை இதன் மூலம் கண்டறிய முடியும். உங்களுக்குத் தேவையான அற்புதமான இலக்கியத்தரமிக்க புத்தகங்களை ஒரு சில பக்கங்களை வாசிக்க முடிவதோடு, தேவையெனில் அவற்றை நீங்கள் விலைக்கொடுத்து வாங்கிக்கொள்ள முடியும். இலக்கியத் தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கு இத்தளம் நிச்சயம் உதவும்.

ஆங்கிலத்தில்:

The internet is  really big.  If you want to use it effectively you have to be familiar with search engines. Google has become the search engine of choice for millions of internet users.
There are others, and if the past is any guide, there will be a -better than Google- search engine some day.
But for now Google seems to be the best.  Part of the reason they are the best is that they keep developing new ways of looking at the internet.
above are a couple of additional features that Google offers that you might want to check out now and in the future as they continue to develop.

Tags: google search, google search speciality, google specialties, google other search engines, google main part of search engine website, useful google search engine site, book google dot com, youtube.com, video google.com, google dot com/finance, maps google.com, images google.com

அசினை பழிக்கு பழிவாங்கிய விஜய். கோலிவுட்டில் பெரும் பரபரப்பு

விஜய்யுடன் அசின் நடித்த போக்கிரி, சிவகாசி, காவலன் போன்ற அனைத்து படங்களும் ஹிட்தான். அந்த செண்டிமெண்டில்தான் காவலன் படத்தை அடுத்து துப்பாக்கி படத்தில் நடிக்க முதலில் அசினைத்தான் விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும் அணுகினர். ஆனால் அப்போது பாலிவுட்டில் அசின் பிசியாக இருந்ததால் தற்போது கால்ஷீட் இல்லை இரண்டு வருடங்களுக்கு பிறகு பார்க்கலாம் என்று அசால்ட்டாக கூறிவிட்டார். இதனால் கடுப்பான விஜய், பின்னர் காஜல் அகர்வாலை ஹீரோயின் ஆக்கினார். அந்த படம் பயங்கர ஹிட்.

தற்போது அசின் பாலிவுட்டிலும், படமில்லாமல் வெட்டியாக இருக்கிறார். இந்த நேரத்தில் தன் பழைய உறவை புதுப்பிக்க விஜய்யிடம் ஜோடியாக நடிக்க சான்ஸ் கேட்டுள்ளார் அசின். இம்முறை விஜய் இனிமேல் உன்கூட நடிக்கிற ஐடியா கொஞ்சம்கூட இல்லை. பேசாமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகு என்று அவர் முன்பு கூறிய பதிலுக்கு பழிவாங்கிவிட்டாராம்.

எனவே பயங்கர அப்செட்டில் இருக்கிறார் அசின். வீட்டிலும் திருமணம் செய்துகொள்ள நிர்ப்பந்தித்து வருகிறார்கள். கூடியவிரையில் அசினின் திருமண செய்தியை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

திருமண வீட்டில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தவர்கள் சுட்டு வீழ்த்தப்படும் அதிர்ச்சி காட்சி

யேமன் நாட்டில் இடம்பெற்ற திருமண வீடு ஒன்றில் கங்ணம் ஸ்டைல் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்த இளைஞர்களுள் மூவர் ஏ.கே 47 துப்பாக்கியால் அண்மையிலிருந்து சுட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் தவறுதலாகவே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.